/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
அதிகாரிகள் மீது புகார் கூறிய போலீஸ்காரர் கைது
/
அதிகாரிகள் மீது புகார் கூறிய போலீஸ்காரர் கைது
ADDED : ஜன 22, 2025 02:11 AM

தென்காசி:தென்காசி போலீஸ் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்த போலீஸ்காரர் சைலஷ் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைலஷ் 38. 2003ல் போலீஸ் பணிக்கு சேர்ந்தார். இவர் பணிபுரிந்த கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகாரிகள் மீது புகார் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த போது உயரதிகாரி ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர் பின் ஊத்துமலைக்கு மாற்றப்பட்டார். இரு மாதங்களாக மருத்துவ விடுப்பில் உள்ளார். அவர் மீது புளியங்குடி பகுதியை சேர்ந்த இளம் பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.