sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை

/

ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை

ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை

ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை


ADDED : செப் 29, 2024 03:05 AM

Google News

ADDED : செப் 29, 2024 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:தென்காசி அருகே 75 வயதானவர், அவரது மனைவி, மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே கம்பிளியை சேர்ந்தவர் முருகேசன் 50.

இவரது மனைவி பூமாரி. இவர்களுக்கு சிவா என்ற மகனும் ,சண்முகப்பிரியா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் முருகேசன் விபத்தில் தலையில் காயமுற்றார். இதனால் அவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டது. அண்மையில் கண்பார்வையும் பாதிக்கப்பட்டது. மனமுடைந்த நிலையில் இருந்த அவர் கம்பிளியில் ஒதுக்குப்புறமாக உள்ள தோப்பில் தனியே வசிக்கும் தந்தை பரமசிவன் 75, தாய் சுடலை மாடத்தி 68, ஆகியோரது வீட்டுக்கு சென்றிருந்தார்.

மருமகளுக்கு போன் செய்து பேசிய முருகேசன் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். அதன் பிறகு தொடர்பில் இல்லை. அவரது மகன் சிவா, தாத்தாவின் தோப்பில் வந்து பார்த்தபோது தாத்தா, பாட்டி மற்றும் தந்தை ஆகியோர் வாழைப்பழத்தில் விஷத்தை கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

வயது மூப்பு, மனநிலை பாதிப்பு விரக்தியில் தற்கொலை செய்ததாக ஆய்க்குடி போலீசார் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us