sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

 போலீஸ்காரரை வெட்டிய இருவர் சுற்றிவளைப்பு

/

 போலீஸ்காரரை வெட்டிய இருவர் சுற்றிவளைப்பு

 போலீஸ்காரரை வெட்டிய இருவர் சுற்றிவளைப்பு

 போலீஸ்காரரை வெட்டிய இருவர் சுற்றிவளைப்பு


ADDED : டிச 06, 2025 02:05 AM

Google News

ADDED : டிச 06, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி: விசாரணைக்கு சென்ற போலீசை அரிவாளால் வெட்டியவரும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பொத்தையை சேர்ந்தவர் இசக்கி பாண்டி, 30. இவரது மனைவி, தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நெட்டூரை சேர்ந்தவர். தம்பதி பிரச்னையால் மனைவி நெட்டூரில் பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

இசக்கி பாண்டி, டிச., 3ம் தேதி இரவில் தன் நண்பருடன் நெட்டூரில் மாமனார் வீட்டிற்கு சென்று, மனைவியை அனுப்புமாறு தகராறு செய்தார். மாமனார் தரப்பில், போலீசுக்கு தெரிவித்தனர்.

அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்து போலீஸ்காரர் முருகன் உட்பட இருவர் வந்து விசாரித்து, இசக்கி பாண்டியை கண்டித்து அனுப்பினர்.

அங்கிருந்து கிளம்பி சென்ற இசக்கி பாண்டி, மீண்டும் நண்பருடன் புறக்காவல் நிலையம் சென்று, அங்கிருந்த போலீஸ்காரர் முருகனிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டினார்.

பின், நண்பருடன் தப்பி சென்றார். இசக்கி பாண்டி, அவரது நண்பர் பேச்சிதுரை, 19, ஆகியோரை ஆலங்குளம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us