sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

ரூ.4,500 லஞ்சம் வாங்கிய கிராம அதிகாரி சிக்கினார்

/

ரூ.4,500 லஞ்சம் வாங்கிய கிராம அதிகாரி சிக்கினார்

ரூ.4,500 லஞ்சம் வாங்கிய கிராம அதிகாரி சிக்கினார்

ரூ.4,500 லஞ்சம் வாங்கிய கிராம அதிகாரி சிக்கினார்

1


ADDED : ஜன 22, 2025 01:49 AM

Google News

ADDED : ஜன 22, 2025 01:49 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரகேரளம்புதுார்:பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., பிடிபட்டார்.

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதுார் அருகே கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் குமாரவேல், 52. இவருக்கு பூர்வீகமான 1.27 ஏக்கர் நிலத்தை, பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்தார். ராஜகோபாலபேரி கிராம நிர்வாக அதிகாரி பத்மாவதி, 39, பட்டா மாற்றத்திற்கான ஆவணங்களை குமாரவேலுவிடம் கேட்டு பெற்றார். பட்டா மாறுதலுக்கு 10,000 ரூபாய் செலவாகும் என்றார். பின், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். குமாரவேல் மறுத்ததால் 4,500 ரூபாய் மட்டுமாவது லஞ்சம் தருமாறு கேட்டார்.

லஞ்சம் தர விரும்பாத குமாரவேல், லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., பால் சுதரிடம் புகார் செய்தார். போலீசார், ரசாயன பவுடர் தடவிய 4,500 ரூபாயை குமாரவேலிடம் கொடுத்தனர். அந்த பணத்தை குமாரவேல், பத்மாவதியிடம் கொடுத்தபோது, போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். பத்மாவதி வீட்டிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us