sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

போதை டிரைவரால் விபத்து பஸ்கள் மோதல்: 43 பேர் காயம்

/

போதை டிரைவரால் விபத்து பஸ்கள் மோதல்: 43 பேர் காயம்

போதை டிரைவரால் விபத்து பஸ்கள் மோதல்: 43 பேர் காயம்

போதை டிரைவரால் விபத்து பஸ்கள் மோதல்: 43 பேர் காயம்


ADDED : ஜூலை 31, 2024 08:59 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 08:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு பி.எல்.ஏ., என்ற தனியார் பஸ்சும், கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூருக்கு லிங்கன் என்ற தனியார் பஸ்சும் நுாற்றுக்கும் மேற்பட்ட பயணியருடன் சென்றன. ஏராளமான மாணவ - மாணவியரும் பயணித்தனர்.

இதில், பி.எல்.ஏ., பஸ்சை தஞ்சாவூரைச் சேர்ந்த அருள், 35, லிங்கன் பஸ்சை திருவையாறைச் சேர்ந்த செல்வகுமார், 27, ஓட்டினர். தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் வயலுார் கிராமத்தில் இரண்டு தனியார் பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

விபத்தில், இரண்டு பஸ் டிரைவர்கள் உட்பட 43 பயணியர் படுகாயமடைந்த நிலையில், 25 பயணியர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். விபத்தால், தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டிரைவர் செல்வகுமார் மது போதையிலும், மொபைல் போனில் பேசியபடி அதிவேகமாக பஸ்சை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக பயணியர் தெரிவித்தனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us