sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

தமிழ் முறைப்படி பெண்கள் நடத்திய ஆதிசக்தி ஞானபீடம் கும்பாபிஷேகம்

/

தமிழ் முறைப்படி பெண்கள் நடத்திய ஆதிசக்தி ஞானபீடம் கும்பாபிஷேகம்

தமிழ் முறைப்படி பெண்கள் நடத்திய ஆதிசக்தி ஞானபீடம் கும்பாபிஷேகம்

தமிழ் முறைப்படி பெண்கள் நடத்திய ஆதிசக்தி ஞானபீடம் கும்பாபிஷேகம்


ADDED : செப் 07, 2024 12:26 AM

Google News

ADDED : செப் 07, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனம், இந்திரா நகரில் சித்தர்களின் தலைவி ஆதிசக்தி ஞானபீடம் மற்றும் சித்தர்கள், விநாயகர், முருகன், வாலைக்குமாரி, ஸ்ரீலஸ்ரீமூட்டைசுவாமிகள் அருள்கூடம் ஆகிய திருமேனிகள் கொண்ட சிறிய கோவில் அமைக்கப்பட்டது.

கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 4ம் தேதி மாலை துவங்கி, யாகசாலை பூஜை, நான்கு கால பூஜை நடந்தது. இதில், தமிழ் மந்திரங்கள் மட்டுமே ஓதப்பட்டது.

தொடர்ந்து, நேற்று காலை இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளை, உலகளாவிய ஆசீவக தமிழ் சித்தர் வழிபாட்டு மையம், சித்தவித்தை ஞானபீடம் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடந்தது.

இதில், பச்சை ஆடை உடுத்தி, 60 பெண்களே முன்னின்று கும்பாபிஷேகத்தை நடத்தினர். கோவில் கருவறையில் தெய்வ திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்தனர்.

சித்தர்கள் போற்றும் பஞ்ச பூதங்களை குறிக்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் வடிவங்கள் வேள்வி குண்டங்களாக அமைக்கப்பட்டிருந்தன.

கும்பாபிஷேகத்தில், ஆசீவக தமிழ் சித்தர் கண்ணன் அடிகள் மற்றும் கோவை காமாட்சிபுரம் ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்திலேயே முதன்முறையாக பெண்களே யாகசாலை பூஜைகள் நடத்தி, கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us