/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கீழையூர் கோவிலில் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
/
கீழையூர் கோவிலில் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
ADDED : ஆக 13, 2024 11:36 PM

தஞ்சாவூர்:நாகை மாவட்டம் கீழையூரில் செம்மலைநாதர் எனும் அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலின் வரலாற்றை அறிந்துகொள்ள வரலாற்று ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான குழுவினர், கீழையூருக்குச் சென்று கள ஆய்வு செய்தனர்.
மணிமாறன் கூறியதாவது:
செம்மலைநாதர் கோவிலில் உள்ள சிற்பங்கள், கட்டுமானங்கள் சோழர் காலத்தைச் சார்ந்துள்ளன. சோழர், பாண்டியர், நாயக்கர் மற்றும் மராட்டிய மன்னர்களால் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
கோவில் கருவறைக்கு முன் உள்ள மண்டபத்து துாணில், முதலாம் ராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி குறித்த பழமையான கல்வெட்டு உள்ளது.
வெளிப்புறச் சுவரில் திரிபுவன சக்கரவர்த்திகள், இரண்டாம் ராஜராஜன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன், பராக்கிரம பாண்டியன் போன்றோரின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
ராஜராஜ சோழ வளநாட்டு, அளநாட்டு பிரம்மதேசம், ஸ்ரீ ராஜராஜ சதுர்வேதிமங்கலம் என இவ்வூர் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது.
இக்கோவில் இறைவன் பெயர் ஸ்ரீ சிவபாத ஈஸ்வரமுடையார் என்றும், இவ்வூரின் மையத்தில் உள்ள விஷ்ணு கோவில் ஜலசயன பெருமாள் கோவில் என்றும் அழைக்கப்பெற்றுள்ளது.
கோவில் கல்வெட்டுகளை படி எடுத்தால், 1,000 ஆண்டுகள் பழமை மிக்க சிவாலயத்தின் சிறப்பை முழுமையாக அறிய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.