sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

வறண்டு கிடக்கும் ஏரியில் இறங்கி விவசாயிகள், மக்கள் ஆர்ப்பாட்டம்

/

வறண்டு கிடக்கும் ஏரியில் இறங்கி விவசாயிகள், மக்கள் ஆர்ப்பாட்டம்

வறண்டு கிடக்கும் ஏரியில் இறங்கி விவசாயிகள், மக்கள் ஆர்ப்பாட்டம்

வறண்டு கிடக்கும் ஏரியில் இறங்கி விவசாயிகள், மக்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 07, 2024 02:02 AM

Google News

ADDED : ஆக 07, 2024 02:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் அருகே கடையக்குடி கிராமத்தில், 134 ஏக்கரில் அய்யனார்குருக்கள் ஏரி உள்ளது. இதன் வாயிலாக 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரிக்கு புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து தண்ணீர் வரத்துக்கான நீர்வழிப்பாதை உள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் வராததால், விவசாயம் செய்ய முடியாமலும், போதிய குடிநீர் இன்றியும் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கண்டுக்கொள்ளாத நிலையில், நேற்று அய்யனார் குருக்கள் ஏரிக்குள் இறங்கிய பெண்கள் மற்றும் விவசாயிகள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், 'உடனடியாக புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில், கூடுதலாக தண்ணீரை திறந்து, ஏரியில் நீர் நிரப்ப வேண்டும்' என கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறியதாவது:

கடையக்குடியில் 1,500 பேர் வசிக்கின்றனர். அய்யனார் குருக்கள் ஏரி வாயிலாக தான் சாகுபடி செய்கிறோம். இந்த ஏரிக்கு புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்த தண்ணீர் வரும். ஆனால் கடந்தாண்டு வராததால் ஏரியும் வறண்டு விட்டது. இந்த ஆண்டாவது நாங்கள் விவசாயம் செய்யவும், குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கவும் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us