/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
துப்பாக்கியை கண்டுகொள்ளாத போலீஸ்: போனில் ஆர்வம்
/
துப்பாக்கியை கண்டுகொள்ளாத போலீஸ்: போனில் ஆர்வம்
ADDED : ஜூலை 05, 2024 11:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து நேற்று மதியம் 3:30 மணிக்கு புறப்பட்ட அரசு பஸ் ஒன்றில், பெண் போலீசார் சிலர், தஞ்சாவூருக்கு பயணம் செய்தனர்.
அவர்களில் சில போலீசார், தாங்கள் கையுடன் எடுத்து வந்திருந்த துப்பாக்கி யை, காலில் போட்டு மிதித்தபடி பயணம் செய்தனர்.
கூட்டம் குறைந்தவுடன் துப்பாக்கியை தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளாமல், குப்பை போல, இருக்கையின் எதிரே கீழே போட்டு விட்டு, போன் பார்த்தப்படி ஜாலியாக பயணம் செய்தனர்.
போலீசாரின் மெத்தனப் போக்கை பார்த்து, பயணியர், அதிர்ச்சி அடைந்தனர்.