sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

மனு அளித்த ஐந்து நாட்களில் பஸ் ஏற்பாடு செய்த கலெக்டர்

/

மனு அளித்த ஐந்து நாட்களில் பஸ் ஏற்பாடு செய்த கலெக்டர்

மனு அளித்த ஐந்து நாட்களில் பஸ் ஏற்பாடு செய்த கலெக்டர்

மனு அளித்த ஐந்து நாட்களில் பஸ் ஏற்பாடு செய்த கலெக்டர்

2


ADDED : ஆக 11, 2024 06:35 AM

Google News

ADDED : ஆக 11, 2024 06:35 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே வடுகன்புதுப்பட்டி கிராமத்தில், சில ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாமல், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் தினமும் 2 கி.மீ., காட்டுப்பகுதி வழியாக நடந்து வெண்டையம்பட்டி சாலைக்கு சென்று, பஸ் ஏறி பயணித்து வந்தனர்.

கடந்த, 5ம் தேதி நடந்த குறைதீர் கூட்டத்தின் போது, வடுகன்புதுப்பட்டி மக்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல், சீருடையுடன் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளிக்க வந்தனர். பள்ளி சீருடையுடன் மாணவர்களை பார்த்த கலெக்டர் மிகவும் கோபமடைந்து, 'முதலில் மாணவர்களை பள்ளியில் விட்டு வாருங்கள்; பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்' என, கூறினார்.

கலெக்டர் உடனடியாக போக்குவரத்து துறை அலுவலர்களிடம் பேசினார். ஐந்து நாட்களில், சொரக்குடிபட்டியில் இருந்து இயக்கப்படும் தடம் எண் ஏ88 டவுன் பஸ் வெண்டையம்பட்டி வழியாக வடுகன்புதுப்பட்டி வரை நீட்டிப்பு செய்து நேற்று முன்தினம் முதல் இயக்கப்படுகிறது.

பஸ் இயக்கத்தை, நேற்று முன்தினம் இரவு எம்.பி., முரசொலி, திருவையாறு எம்.எல்.ஏ., சந்திரசேகரன், கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.






      Dinamalar
      Follow us