sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

வாக்கிங், செல்பி, மார்க்கெட் விசிட், டீக்கடை புதுவிதமான முறையில் ஓட்டு கேட்ட முதல்வர்

/

வாக்கிங், செல்பி, மார்க்கெட் விசிட், டீக்கடை புதுவிதமான முறையில் ஓட்டு கேட்ட முதல்வர்

வாக்கிங், செல்பி, மார்க்கெட் விசிட், டீக்கடை புதுவிதமான முறையில் ஓட்டு கேட்ட முதல்வர்

வாக்கிங், செல்பி, மார்க்கெட் விசிட், டீக்கடை புதுவிதமான முறையில் ஓட்டு கேட்ட முதல்வர்


ADDED : மார் 24, 2024 01:57 AM

Google News

ADDED : மார் 24, 2024 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூர் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் முரசொலி, நாகை தொகுதியில் இ.கம்யூ., சார்பில் போட்டியிடும் செல்வராஜ் ஆகிய இருவரையும் ஆதரித்து திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து தஞ்சாவூரில் உள்ள தனியார் ஹோட்டலில் வந்து தங்கிய முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை 7:00 மணிக்கு, அன்னை விளையாட்டு மைதானத்தில் தி.மு.க., வேட்பாளர் முரசொலியை அழைத்து வாக்கிங் சென்றப்படி, அங்கிருந்த பெண்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுடன் கை குலுக்கியும், செல்பி எடுத்தப்படியும் ஓட்டுக்கேட்டார்.

பின், காமராஜ் காய்கறி மார்க்கெட்டில் விசிட் அடித்து வியாபாரிகள், பொதுமக்களிடம் ஓட்டு கேட்டார்.

பின், கீழராஜ வீதியில் உள்ள டீக்கடையில், ஸ்டாலின் டீ குடிக்க அமர்ந்தார்.

அப்போது, அவருக்கு வழங்கிய டீ சூடாக இருந்ததால், தஞ்சாவூர் எம்.எல்.ஏ., நீலமேகம், டீ கோப்பையை வாங்கி, நன்றாக ஆற்றி, சூடு ஆறிய பின் முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்தார்.

பின் அந்த டீயை ருசித்து குடித்து விட்டு, டீ குடிக்கும் சூடான பதத்திற்கு ஆற்றி உள்ளார் என்பது போல, எம்.எல்.ஏ.,வை ஒரு பார்வை பார்த்தார் முதல்வர் ஸ்டாலின்.

பெரிய கோவிலுக்காக 2 கி.மீ., சுற்றிய முதல்வர்


தஞ்சாவூர் பெரியகோவில் வழியாகவும், உள்ளேயும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சென்று வந்தால், பதவிக்கு ஆபத்து வந்து விடும் என்ற சென்டிமென்ட் உள்ளது. அதாவது, எம்.ஜி.ஆர்., இந்திரா, கருணாநிதி என பலரும், கோவில் உள்ளே வந்த பின் அரசியல் வாழ்வில் மிகப்பெரிய சரிவை சந்தித்ததாக நம்பப்படுகிறது.
இதனால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தஞ்சாவூருக்கு பலமுறை வந்த போதிலும், பெரியகோவில் வழியை பயன்படுத்தியது இல்லை. இதே போல ஸ்டாலினும் பெரியகோவில் வழியை பயன்படுத்தியது இல்லை.
ஆனால், நேற்று வாக்கிங் போன விளையாட்டு மைதானத்தில் இருந்து காமராஜ் மார்க்கெட்டிற்கு பெரியகோவில் வழியாக சென்றால், 2 கிலோ மீட்டரில் சென்று விடலாம். ஆனால், கோவில் வழியாக செல்லக்கூடாது என்பதற்காக, 2 கி.மீ., துாரம் சுற்றி மார்க்கெட்டிற்கு சென்றார்.








      Dinamalar
      Follow us