/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
'லிப்ட்' கொடுப்பதாக கூறி பெண் கூட்டு பலாத்காரம்
/
'லிப்ட்' கொடுப்பதாக கூறி பெண் கூட்டு பலாத்காரம்
ADDED : செப் 06, 2024 03:03 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் பூதலுாரை சேர்ந்த 45 வயது பெண், செப். 3ம் தேதி தன் மகள் வீட்டிற்கு செல்ல, பூதலுாரில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த ராயந்துாரை சேர்ந்த பிரவீன், 32, ராஜ்கபூர், 25, தனித்தனி டூ வீலரில் வந்துள்ளனர்.
அவர்கள், பெண்ணிடம் லிப்ட் கொடுப்பதாக கூறி, பீரவீன் ஒரு டூ வீலரில் அழைத்துச் சென்றார். பின்னால், ராஜ்கபூர் வந்துள்ளார். பூதலுாரை தாண்டியதும், ஆள் இல்லாத வயல் பகுதிக்கு பெண்ணை அழைத்துச் சென்றனர். பெண் கூச்சலிட்டுள்ளார். அவரை கட்டையால் தாக்கி, பிரவீன், ராஜ்கபூர் இருவரும் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்நிலையில், தன் தாய் வீட்டிற்கு வராததால், சகோதரனை விட்டு, அவரது மகள் தேட சொல்லியுள்ளார். அவர் தேடி வந்த போது, வழியில் தாய் அழுது கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். போலீசார் இருவரையும் விசாரிக்கின்றனர்.