sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

 இன்னும் 1,300 கீழமை நீதிமன்றங்கள் தேவை ஐகோர்ட் நீதிபதி தகவல்

/

 இன்னும் 1,300 கீழமை நீதிமன்றங்கள் தேவை ஐகோர்ட் நீதிபதி தகவல்

 இன்னும் 1,300 கீழமை நீதிமன்றங்கள் தேவை ஐகோர்ட் நீதிபதி தகவல்

 இன்னும் 1,300 கீழமை நீதிமன்றங்கள் தேவை ஐகோர்ட் நீதிபதி தகவல்


ADDED : நவ 17, 2025 01:41 AM

Google News

ADDED : நவ 17, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 1.01 கோடி ரூபாய் மதிப்பில், வக்கீல் சங்க கூடுதல் கட்டடத்தை நேற்று திறந்து வைத்த ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் பேசியதாவது:

தமிழகத்தில் இன்னும் பல மாவட்ட, சார்பு, வட்ட நீதிமன்றங்களுக்கு சொந்தமான கட்டடங்கள் இல்லாததால், அரசு கொடுத்த வேறு கட்டடங்களிலும், வாடகை கட்டடங்களிலும் இயங்கி வருகின்றன.

ஒருவர் வழக்கு தாக்கல் செய்த நாளில் இருந்து, இரண்டு ஆண்டுகளுக்குள், அதை முடித்தால், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தில், தற்போது 1,300 நீதிமன்றங்கள் உள்ளன.

மேலும் 1,300 கீழமை நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் வழக்கு களுக்கு இரண்டு ஆண்டில் தீர்வு காண முடியும்.

இதற்கு கட்டடங்கள், நீதிபதிகள், ஊழியர்களின் ஊதிய செலவு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றுக்கு 16,000 கோடி ரூபாய் நிதி தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us