sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

ரூ.17 லட்சம் திருடியோருக்கு 2 ஆண்டு சிறை  தண்டனை

/

ரூ.17 லட்சம் திருடியோருக்கு 2 ஆண்டு சிறை  தண்டனை

ரூ.17 லட்சம் திருடியோருக்கு 2 ஆண்டு சிறை  தண்டனை

ரூ.17 லட்சம் திருடியோருக்கு 2 ஆண்டு சிறை  தண்டனை


ADDED : நவ 08, 2024 02:15 AM

Google News

ADDED : நவ 08, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்பகோணம்,:தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் அருகே கோவிந்தபுரம், விட்டல்தாஸ் சமஸ்தானத்தில் சூப்பர்வைசராக பணியாற்றுபவர் சந்திரசேகரன். இவர், கடந்த பிப்., 22ம் தேதி, கும்பகோணத்தில் உள்ள இரண்டு வங்கிகளில் 17 லட்சம் ரூபாயை எடுத்து, தான் வந்த காரில் பாதுகாப்பாக வைத்தார்.

தொடர்ந்து அவர், கும்பகோணம், மடத்துத் தெருவில் உள்ள காப்பித்துாள் கடைக்குச் சென்று, காபி துாள் வாங்கி, காரில் வந்து பார்த்த போது, தான் வைத்திருந்த 17 லட்சம் பணம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது தொடர்பாக சந்திரசேகரன், கிழக்கு போலீசில் அளித்த புகாரில், மார்ச் 1ம் தேதி, பெரம்பலுார் மாவட்டம், அரும்பாவூரை சேர்ந்த செந்தில்குமார், 37, சென்னை, கோட்டூர்புரத்தை சேர்ந்த சுரேஷ், 25, உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை, கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசி நேற்று, செந்தில்குமார், சுரேஷ் ஆகியோருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மீதமுள்ள நான்கு பேர் மீது விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us