sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

தஞ்சையில் ரவுடி கொலை 4 பேர் மீது வழக்குப்பதிவு

/

தஞ்சையில் ரவுடி கொலை 4 பேர் மீது வழக்குப்பதிவு

தஞ்சையில் ரவுடி கொலை 4 பேர் மீது வழக்குப்பதிவு

தஞ்சையில் ரவுடி கொலை 4 பேர் மீது வழக்குப்பதிவு


ADDED : செப் 27, 2024 02:29 AM

Google News

ADDED : செப் 27, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூர், கரந்தை மிளகுமாரி செட்டித் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன், 35, மீன் வியாபாரியான இவர், போலீசாரின் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவர் மீது கொலை, அடிதடி உட்பட பல வழக்குகள் உள்ளன.

கரந்தை புற்று மாரியம்மன் கோவில் அருகே உள்ள வடவாற்றங்கரையில் இவர் தன் நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, இவரை அப்பகுதிக்கு வந்த சிலர் அரிவாளால் வெட்டி தப்பினர். படுகாயமடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அறிவழகனுக்கும், கரந்தை கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த திவாகர், 30, என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது.

திவாகர் மற்றும் அவரது நண்பர்கள் கந்தவேல், செல்வகுமார், பரத் ஆகியோர் அறிவழகனை வெட்டிக் கொன்றதாக வழக்குப் பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us