sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

குளம் துார் வாரும் பணிக்கு ரூ.50,000 வழங்கிய எம்.எல்.ஏ.,

/

குளம் துார் வாரும் பணிக்கு ரூ.50,000 வழங்கிய எம்.எல்.ஏ.,

குளம் துார் வாரும் பணிக்கு ரூ.50,000 வழங்கிய எம்.எல்.ஏ.,

குளம் துார் வாரும் பணிக்கு ரூ.50,000 வழங்கிய எம்.எல்.ஏ.,


ADDED : நவ 07, 2025 02:15 AM

Google News

ADDED : நவ 07, 2025 02:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேராவூரணி: குளம் துார் வாரும் பணிக்காக, பேராவூரணி எம்.எல்.ஏ., 50,000 ரூபாயை நேற்று வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே அம்மையாண்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட, பஞ்சநதிபுரம் கிராமத்தில் உள்ள உள்ளிக்குளம், பல ஆண்டுகளாக துார் வாராமல், நீரை தேக்கி வைக்க வழியின்றி இருந்தது. இப்பகுதி மக்கள் குளத்தை துார்வார முடிவு செய்தனர். இதையடுத்து, கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கமான 'கைபா' அமைப்புடன், துார்வாரும் பணியை முன்னெடுத்தனர்.

இப்பணியை அக்., 13ல் பிறபடுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், பேராவூரணி தி.மு.க., - எம்.எல்ஏ., அசோக்குமார், கைபா அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோரால் துவக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று துார்வாரும் பணியை பார்வையிட்ட, எம்.எல்.ஏ., அசோக்குமார், கிராம மக்களை பாராட்டினார். பின், துார்வாரும் பணிக்காக தன் தொகுதி பங்களிப்பு தொகை 50,000 ரூபாயை வழங்கினார்.






      Dinamalar
      Follow us