sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

பள்ளிக்கு 33 சென்ட் நிலம் தானம் ஹெச்.எம்., குடும்பத்திற்கு பாராட்டு

/

பள்ளிக்கு 33 சென்ட் நிலம் தானம் ஹெச்.எம்., குடும்பத்திற்கு பாராட்டு

பள்ளிக்கு 33 சென்ட் நிலம் தானம் ஹெச்.எம்., குடும்பத்திற்கு பாராட்டு

பள்ளிக்கு 33 சென்ட் நிலம் தானம் ஹெச்.எம்., குடும்பத்திற்கு பாராட்டு


ADDED : அக் 26, 2025 02:07 AM

Google News

ADDED : அக் 26, 2025 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே அரசு பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றியவரின் குடும்பத்தினர், அவர் பணியாற்றிய பள்ளிக்கு 33 சென்ட் நிலத்தை தானம் அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல்நிலப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ரத்னசபாபதி. இவர், 2021ல் இறந்தார். இவரது மனைவி கலையரசி, 57, மகன்கள் விஜயராகவன், கோவிந்தராஜ், மகள்கள் சுபா, பத்மபிரியா.

ரத்னசபாபதிக்கு சொந்தமான 33 சென்ட் நிலம் அரசுப்பள்ளி அருகில் இருந்தது. இதை ரத்னசபாபதி குடும்பத்தினர், பள்ளிக்கு தானம் வழங்க முடிவு செய்தனர்.

இடத்தை நேற்று முன்தினம் பாப்பநாடு சார் பதிவாளர் அலுவலகத்தில், பள்ளி பெயருக்கு கிரையம் செய்து கொடுத்தனர். தலைமையாசிரியர் குடும்பத்தினரின் செயலை, கிராம மக்கள் பாராட்டினர்.

ரத்னசபாபதி மகன் விஜயராகவன் கூறுகையில், ''எங்கள் பூர்வீகம் திருமங்கலக்கோட்டை. தந்தை இந்த ஊர் அரசு பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது, பள்ளி அருகில் உள்ள 33 சென்ட் நிலத்தை பள்ளிக்கு கொடுக்க வேண்டும் என, பலமுறை கூறினார். அவரது எண்ணம் போல் நிலத்தை தானம் வழங்கினோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us