sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

மாணவன் தற்கொலை வழக்கு பள்ளி ஆசிரியருக்கு 'கம்பி'

/

மாணவன் தற்கொலை வழக்கு பள்ளி ஆசிரியருக்கு 'கம்பி'

மாணவன் தற்கொலை வழக்கு பள்ளி ஆசிரியருக்கு 'கம்பி'

மாணவன் தற்கொலை வழக்கு பள்ளி ஆசிரியருக்கு 'கம்பி'


ADDED : அக் 26, 2025 02:02 AM

Google News

ADDED : அக் 26, 2025 02:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லிப்பட்டினம்: மாணவன் தற்கொலை வழக்கில், அவரை தற்கொலைக்கு துாண்டியஅரசு பள்ளி ஆசிரியர் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே சின்னமனையை சேர்ந்தவர் விஷ்ணு, 20; மதுரை அண்ணா பல்கலை கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்தார். இவர், தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் விஷ்ணு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சேதுபாவாசத்திரம் போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்தனர். தன் இறப்பு காரணம், பாபு என்ற பெயரை பள்ளி சுவரில் எழுதி வைத்திருந்தார்.

விசாரணையில், பாபு, 40, அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருவதும், இருவருக்கும் நெருக்கமான நட்பு இருந்ததும் தெரியவந்தது. சேதுபாவாசத்திரம் போலீசார் பாபு மீது தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us