sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

தனியார் மினி பஸ் டிரைவர் மர்ம கும்பலால்  வெட்டி கொலை

/

தனியார் மினி பஸ் டிரைவர் மர்ம கும்பலால்  வெட்டி கொலை

தனியார் மினி பஸ் டிரைவர் மர்ம கும்பலால்  வெட்டி கொலை

தனியார் மினி பஸ் டிரைவர் மர்ம கும்பலால்  வெட்டி கொலை


ADDED : டிச 08, 2024 12:10 AM

Google News

ADDED : டிச 08, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பசுபதிகோவில் பகுதியை சேர்ந்தவர் சிவா, 28; மினி பஸ் டிரைவர். இவர், நேற்று கண்டியூரில் இருந்து அய்யம்பேட்டை வரை பஸ்சை இயக்கி வந்தார். பிறகு, தஞ்சாவூர்- - கும்பகோணம் பிரதான சாலையில் வழக்கமான இடத்தில் பஸ்சை ஓரமாக நிறுத்தி விட்டு, கண்டக்டர் ரவியுடன் டீ குடிக்க சென்றார்.

அப்போது, டூ - வீலரில், முகமூடி அணிந்து வந்த மூன்று பேர், சிவாவை நடுரோட்டில் சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

அப்பகுதி பொதுமக்கள், கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தஞ்சாவூர் - -கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர் எஸ்.பி., ஆஷிஷ்ராவத் மற்றும் அய்யம்பேட்டை போலீசார், பேச்சு நடத்தி, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என உறுதியளித்ததன்படி, போராட்டம் கைவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us