sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

மாமனாரை கொன்ற மருமகன் ஆறு மாதங்களுக்கு பின் கைது

/

மாமனாரை கொன்ற மருமகன் ஆறு மாதங்களுக்கு பின் கைது

மாமனாரை கொன்ற மருமகன் ஆறு மாதங்களுக்கு பின் கைது

மாமனாரை கொன்ற மருமகன் ஆறு மாதங்களுக்கு பின் கைது


ADDED : ஜூலை 15, 2025 06:22 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்மாபேட்டை; தஞ்சாவூரில், மாமனாரை கடத்தி கொலை செய்த மருமகனை, ஆறு மாதங்களுக்கு பின் போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலத்தை சேர்ந்த சேகர், 65, என்பவரின் மூத்த மகள் ராகினி, 35; தஞ்சையில் உள்ள ஹோட்டலில் பணியாற்றினார். இவருக்கும், அந்த ஹோட்டலுக்கு வந்து தங்கி சென்ற தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அரவிந்த் ராவ், 42, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, திருமணம் செய்து கொண்டனர்.

ராகினி குடும்பத்தினர், அரவிந்த் ராவிடம் தகராறு செய்ததில், ஆத்திரமடைந்த அரவிந்த் ராவ், ராகினியின் தங்கை போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

சேகர் குடும்பத்தினர், தஞ்சாவூர் போலீசிலும், அம்மாபேட்டை போலீசிலும் புகார் அளித்தனர். புகார்களை வாபஸ் வாங்க மிரட்டிய அரவிந்த் ராவ், 2024, டிச., 19ல் சேகரை தெலுங்கானாவிற்கு கடத்தி சென்று, கொலை செய்தார்.

அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, அரவிந்த் ராவை தேடினர். இந்நிலையில், நெடுவாசல் வி.ஏ.ஓ., விவேக் முன், நேற்று முன்தினம் அரவிந்த்ராவ் சரணடைந்தார். போலீசார், அவரை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us