sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

திராட்சை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

/

திராட்சை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

திராட்சை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

திராட்சை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : ஜூலை 13, 2011 10:33 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 10:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர் : விளைச்சல் குறைவால் திராட்சை விலை ரூ.40 க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கம்பம் பள்ளத்தாக்கில் சின்னமனூர், கம்பம், காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், சுருளிப்பட்டி, கூடலூர், சின்னஓவலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கருப்பு பன்னீர் திராட்சை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இத்திராட்சை கொடிகள் கவாத்து அடித்து, பஞ்சு கட்டி பூத்து துளிர்விடும் பருவத்தில் இருந்தது. அப்போது மழை பெய்ததால் திராட்சை கொடியில் பூ பூத்து வெளியில் வர முடியாமல் போனது.



தற்போது நல்ல முறையில் இவை விளைந்துள்ளது. ஜூன் மாத இறுதியில் அறுவடை துவங்கியது. விளைச்சல் குறைவால் கடந்த சில நாட்களாக கிலோரூ. 40 வரை விற்கப்படுகிறது.(கடந்த வாரம் ரூ. 24). திராட்சை விவசாயிகள் கூறும் போது, கடந்த பல மாதங்களாக உற்பத்தி செலவினங்களுக்கு கூட கை கொடுக்காத நிலையில் திராட்சையின் விலை இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல விலை கிடைத்திருப்பது மகிழ்ச்சி,'என்றனர்.










      Dinamalar
      Follow us