sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

18ம் கால்வாயில் தண்ணீர் திறப்பிற்கு முன் துார்வாரணும்: கரைப்பகுதியில் தொடரும் ஆக்கிரமிப்புகள்

/

18ம் கால்வாயில் தண்ணீர் திறப்பிற்கு முன் துார்வாரணும்: கரைப்பகுதியில் தொடரும் ஆக்கிரமிப்புகள்

18ம் கால்வாயில் தண்ணீர் திறப்பிற்கு முன் துார்வாரணும்: கரைப்பகுதியில் தொடரும் ஆக்கிரமிப்புகள்

18ம் கால்வாயில் தண்ணீர் திறப்பிற்கு முன் துார்வாரணும்: கரைப்பகுதியில் தொடரும் ஆக்கிரமிப்புகள்


ADDED : செப் 12, 2024 05:40 AM

Google News

ADDED : செப் 12, 2024 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: 18ம் கால்வாயில் தூர்வாரி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாசன விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து கூடலுார், கம்பம், உத்தமபாளையம், பண்ணைப்புரம், கோம்பை, தேவாரம் வழியாக போடி வரை செல்லும் 18ம் கால்வாய் 55 கி.மீ., தூரம் கொண்டதாகும். முல்லைப் பெரியாறு அணையில் நீர் இருப்பைப் பொறுத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இக்கால்வாய் மூலம் 55 கண்மாய்கள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து 30 ஆயிரம் ஏக்கரில் மானாவாரி விவசாய நிலங்கள் பயன்பெறும். இது தவிர 6839 ஏக்கர் பரப்பளவில் நேரடி பாசனமும் உள்ளது.

கடந்த ஆண்டு அணையில் நீர் இருப்பு போதுமானதாக இருந்த போதிலும் மூன்று மாதங்கள் தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கரைப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றாததாலும், தூர் வாராததாலும் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. சீரமைத்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இருந்தபோதிலும் கடைமடை வரை தண்ணீர் செல்லாமல் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது. அதனால் இந்த ஆண்டு முன்கூட்டியே 18ம் கால்வாய் தூர்வாரி உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என 18ம் கால்வாய் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ராமராஜ், தலைவர், 18ம் கால்வாய் விவசாயிகள் சங்கம், கோம்பை: கடந்த ஆண்டு 18ம் கால்வாய் தூர் வாராததால் மிகக் குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 55 கண்மாய்களில் 4 கண்மாய்கள் மட்டுமே நிரம்பியது.

கரைப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றவில்லை. சீமை கருவேல மரங்கள், செடி கொடிகள் அகற்றவில்லை. தற்போது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால் இந்த ஆண்டு கால்வாய் தூர்வாரி விரைவில் தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us