sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கருவேலங் காடாக மாறும் தாமரைக்குளம் கண்மாய்

/

கருவேலங் காடாக மாறும் தாமரைக்குளம் கண்மாய்

கருவேலங் காடாக மாறும் தாமரைக்குளம் கண்மாய்

கருவேலங் காடாக மாறும் தாமரைக்குளம் கண்மாய்


ADDED : ஜூலை 20, 2024 12:19 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம் : உத்தமபாளையம் தாமரைகுளம் கண்மாய் கருவேலங்காடாக மாறி வருகிறது. 50 சதவீத பகுதிகள் காடாக மாறி விட்டதால் தண்ணீர் தேக்க முடியாத நிலை எழுந்துள்ளது.

உத்தமபாளையத்தில் தாமரைக்குளம் கண்மாய், குப்பிசெட்டிகுளம் கண்மாய் உள்ளிட்ட பாசனத்திற்கு பயன்படும் முக்கிய கண்மாய்கள் உள்ளன . இதில் தாமரைகுளம் கண்மாய், 55 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். சுருளி அருவிக்கு செல்லும் ரோட்டில் கோகிலாபுரத்தையும், ராமசாமி நாயக்கன்பட்டியையும் இணைக்கிறது. இந்த கண்மாயில் கணிசமான பகுதி ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளது.

மீதமுள்ள பகுதியில் நீர்வளத்துறை தூர் வாராததால் கருவேல மரங்கள் வளர்ந்து, அடர்ந்த கருவேலங் காடாக மாறி உள்ளது.

அத்துடன் ஆகாயத்தாமரயும் வளர்ந்து தண்ணீர் தேங்கும் பரப்பை சுருக்கி வருகிறது. இதனால் உத்தமபாளையம் பரவு பகுதியில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பாதிக்கபடுகின்றனர். காணாமல் போகும் இந்த கண்மாயை தூர்வாரி, முழு அளவில் தண்ணீர் தேக்க நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us