sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆனால் தேர்தலே நடக்காது நடிகர் சந்திரசேகர் பிரசாரம்

/

மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆனால் தேர்தலே நடக்காது நடிகர் சந்திரசேகர் பிரசாரம்

மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆனால் தேர்தலே நடக்காது நடிகர் சந்திரசேகர் பிரசாரம்

மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆனால் தேர்தலே நடக்காது நடிகர் சந்திரசேகர் பிரசாரம்


ADDED : ஏப் 07, 2024 05:47 AM

Google News

ADDED : ஏப் 07, 2024 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு : மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வந்தால் இனி தேர்தல் நடக்காது. ராணுவ ஆட்சிதான் நடக்கும் என சினிமா நடிகர் சந்திரசேகர் பிரசாரம் செய்தார்.

தேனி தி.மு.க., வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை ஆதரித்து கண்டமனுாரில் அவர் பேசியதாவது: என் மாப்பிள்ளை தங்க தமிழ்செல்வனுக்கு ஓட்டு கேட்கிறேன். எத்தனையோ பேர் வந்தார்கள், நாம் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து டெல்லிக்கு அனுப்பி வைத்தோம். நம் மண்ணைச் சேர்ந்த நம்ம ஆளு ஒருவர் தற்போது போட்டியிடுகிறார். அவரை வெற்றி பெறச் செய்யுங்கள். வழக்கம்போல் வந்து செல்லும் தேர்தல் அல்ல இது. மூன்றாம் முறையாக மோடி பிரதமராக வந்தால் இனி தேர்தலே நடக்காது. ராணுவ ஆட்சி தான் நடக்கும். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே சாமி என்றால் எப்படி. நான் கும்பிடும் குலசாமி வேண்டாமா, பா.ஜ., வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். முதல்வர் ஸ்டாலின், தங்க தமிழ்ச்செல்வனை உங்களிடம் ஒப்படைத்துள்ளார். அவர் வெற்றி பெற்று டெல்லிக்கு 'பிளைட்' ஏறினால் மோடி வீட்டுக்கு போய்விடுவார். அதுதான் நடக்க போகிறது. மலைக்குப் போனாலும் மாமன் மைத்துனர் துணை வேண்டும் என்பார்கள், தற்போது தேர்தலிலும் மாமன் மைத்துனர் துணை தேவைப்படுகிறது, இவ்வாறு பேசினார்.






      Dinamalar
      Follow us