ADDED : ஆக 08, 2024 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழை நீர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ராமசந்திரன் துவக்கி வைத்தார். ஊர்வலம் பங்ளா மேட்டில் துவங்கி மதுரை ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் வரை சென்று மீண்டும் பங்களா மேடு திரும்பினர்.
ஊர்வலத்தில் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி மாணவர்கள் பதாைக கள் ஏந்தி சென்றனர். ஊர்வலத்தில் உதவி நிர்வாக பொறியாளர்கள் கண்ணன், நடராஜன், இந்திரகோபால், நிலத்தடி நீர் துணை வல்லுனர் விஜயபாஸ்கர், உதவி பொறியாளர் ராஜேஷ் பங்கேற்றனர். ஊர்வலத்தில் என்.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.