ADDED : மே 19, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி அருகே ராசிமலை பகுதியில் மா மரங்களில் கரும்புஞ்சை தாக்குதல் ஏற்பட்டு உள்ளது.
இதனை கட்டுப் படுத்தும் வகையில் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் தொழில் நுட்ப கல்லூரி மாணவிகள் அவன்சியா, பிரியதர்ஷினி, நந்தினி, சவுமியா, நிஷாந்தினி, ஸ்ரீ நித்தியா, ஆர்த்தி, கலையரசி, கவிப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டு ராசிமலை பழங்குடியின விவசாயிகளுக்கு மா மரங்களில் உள்ள கரும்புஞ்சையை கட்டுப்படுத்த ' கரும் புஞ்சை கட்டுப்பாடு வடிநீர் கரைசல்' பயன்படுத்துவது குறித்த செயல் விளக்கம் நடத்தினர்.

