ADDED : செப் 14, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லுாரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச் செயலாளர் நவீன்ராம் வாழ்த்துறை வழங்கினர். முதல்வர் மதளைசுந்தரம், துறைத் தலைவர்களை அறிமுகம் செய்தார்.
முதலாமாண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
ஏற்பாடுகளை துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, வேலை வாய்ப்பு அலுவலர்கள் கார்த்திகேயன், முதலாமாண்டு துறையின் ஒருங்கிணைப்பாளர் சித்ரா, பேராசிரியர்கள் செய்திருந்தனர். துறைத் தலைவர் பிரதாப் நன்றி தெரிவித்தார்.