sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கன மழையால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

/

கன மழையால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

கன மழையால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

கன மழையால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : ஆக 15, 2024 04:14 AM

Google News

ADDED : ஆக 15, 2024 04:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி, : போடி பகுதியில் பெய்த கன மழையால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து அணைப்பிள்ளையார் அணையில் நீர் அருவியாய் கொட்டி வருகிறது.

கேரளா, குரங்கணி, கொட்டகுடி பகுதியில் கடந்த வாரம் தொடர் கன மழை பெய்து வந்தது. நேற்று முன் தினம் போடி, குரங்கணி கொட்டகுடி, வடக்குமலை பகுதியில் இரவு 8 மணிக்கு மேல் பெய்த கன மழை விடிய விடிய பெய்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்த வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

போடி மூணாறு செல்லும் முந்தல் ரோட்டில் உள்ள அணைப்பிள்ளையார் அணையில் தடுப்பணையை தாண்டி வெள்ள நீர் வெள்ளியை உருக்கி விட்டார் போல பெருக்கெடுத்து நீர் அருவியாய் கொட்டி விடுகிறது.

இங்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, மக்களும் குளித்து மகிழ்கின்றனர்.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக சோத்துப்பாறை அணையில் 52 மி.மீ., போடியில் 38.6 மி.மீ., மஞ்சளாறு அணையில் 10.2 மி.மீ.,பதிவானது. மற்ற இடங்களில் 10 மி.மீ., குறைவாக மழை பதிவானது. மொத்தம் 191.5 மி.மீ., பதிவானது.






      Dinamalar
      Follow us