sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டூவீலர்களில் அதிவேக பயணம் போலீஸ் நடவடிக்கை தேவை

/

டூவீலர்களில் அதிவேக பயணம் போலீஸ் நடவடிக்கை தேவை

டூவீலர்களில் அதிவேக பயணம் போலீஸ் நடவடிக்கை தேவை

டூவீலர்களில் அதிவேக பயணம் போலீஸ் நடவடிக்கை தேவை


ADDED : ஆக 15, 2024 04:47 AM

Google News

ADDED : ஆக 15, 2024 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம், : நகர் பகுதி மெயின் - ரோடுகளிலும் டூவீலர்களில் அதிவேகமாக சென்று, பொதுமக்களையும் பிற வாகன ஒட்டிகளை அச்சப்படுத்தும் இளைஞர்களுக்கு கடிவாளம் போட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டங்களை இணைக்கும் ரோடுகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை துறை பராமரித்து வருகிறது. இதனால் வாகன ஒட்டிகள், வாகனங்களை வேகமாக ஒட்டி செல்கின்றனர். சமீபமாக ஏற்பட்ட விபத்துக்களில் உயிரிழப்போர், கை கால்களை இழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விபத்துக்களை கட்டுப்படுத்த டூவீலரில் செல்வோர் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

ஆனாலும் இளைஞர்கள் சிலர் டூவீலர்களில் கூடுதல் சத்தத்துடன் அதிவேகத்தில் செல்கின்றனர். போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள கம்பம், சின்னமனூர் மெயின்ரோடுகளில் இளைஞர்கள் சாகச பயணம் செல்வதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் பொதுமக்களும், பிற வாகனங்களில் பயணிப்பவர்களும் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது.அதிக வேகத்தில் சென்று ரோட்டில் செல்வோரை அச்சுறுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்து, இளைஞர்களுக்கு கடிவாளம் போட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us