ADDED : செப் 04, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி தாசில்தார் கண்ணன் வாகன சோதனை நடத்தினார். அப்போது திருமலாபுரம் விலக்கு பகுதியில் டிப்பர் லாரியில் அனுமதியின்றி மண் கொண்டு செல்வது தெரிந்தது.
லாரியை நிறுத்தி விசாரித்த போது டிரைவர் தப்பி ஓடினார். லாரியில் இருந்த 3 யூனிட் மண்ணுடன் க.விலக்கு போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.