sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு ரோடு எப்போது அமையும்: வரும் ஆண்டிலாவது திட்டம் நிறைவேற்றப்படுமா

/

மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு ரோடு எப்போது அமையும்: வரும் ஆண்டிலாவது திட்டம் நிறைவேற்றப்படுமா

மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு ரோடு எப்போது அமையும்: வரும் ஆண்டிலாவது திட்டம் நிறைவேற்றப்படுமா

மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு ரோடு எப்போது அமையும்: வரும் ஆண்டிலாவது திட்டம் நிறைவேற்றப்படுமா


ADDED : ஜூன் 20, 2024 05:09 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி மாவட்டம் கூடலுார் பளியன்குடி அருகே விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது தமிழக வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில். இக்கோயிலுக்கு செல்ல லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ., துார தமிழக வனப் பாதை உள்ளது. இது தவிர கேரளா குமுளியில் இருந்து கொக்கரக்கண்டம் வழியாக 14 கி.மீ., தூரத்தில் கேரள வனப்பகுதியில் ஜீப் பாதை உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று மட்டும் இங்கு விழா கொண்டாடப்படும். இக்கோவிலுக்கு செல்ல ஜீப் பாதை கேரள வனப்பகுதியில் இருப்பதால் கேரளாவின் அனுமதியுடன் பக்தர்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தமிழக வனப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாததால் பக்தர்கள் அதிகமாக நடந்து செல்ல முடியாமல் கேரள வனப்பாதையை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோயில் கட்டுப்பாடு முழுவதையும் தங்களது வசம் கொண்டு வருவதற்கான திட்டத்தை கேரளா செயல்படுத்தி வருகிறது.

தமிழக வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படுகிறது. அந்த நேரத்திலும் கேரள வனப்பகுதி வழியாக பக்தர்கள் அதிகம் செல்வதால் கேரள வனத்துறை பல்வேறு கெடுபிடிகளை செய்து தமிழக பக்தர்களை புண்படுத்தி வருகிறது.

தமிழக வனப் பகுதியான பளியன்குடியில் இருந்து வாகனங்கள் செல்வதற்காக வரும் ஆண்டிலாவது ரோடு அமைக்க நடவடிக்கை வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழக வனப்பகுதி வழியாக கோயிலுக்கு செல்ல வாகனங்கள் செல்லும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன் ரோடு இருந்துள்ளது. காலப்போக்கில் அவை சீரமைக்காமல் இருந்ததால் நடைபாதையாக மாறியது. 35 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் கோயில் வரை ரோடு அமைக்க தமிழக அரசால் சர்வே பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர் நடவடிக்கை இல்லாததால் அப்பணி முடக்கப்பட்டது.

சமீபத்திலும் ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சர்வே பணிகள் நடந்தன. ரோடு அமைக்க பளியன்குடி வழியாக 6.6 கி.மீ., தூரமும், தெல்லுக்குடி வழியாக 3.6 கி.மீ., தூரமும் உள்ளது. இதில் ரோடு அமைக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us