sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மேகமலையில் சூழல் சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படுமா: சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்ப்பு

/

மேகமலையில் சூழல் சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படுமா: சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்ப்பு

மேகமலையில் சூழல் சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படுமா: சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்ப்பு

மேகமலையில் சூழல் சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படுமா: சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்ப்பு


ADDED : ஜூன் 03, 2024 03:38 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேகமலை, புலிகள் காப்பகமாக மாறிய பின் வனத்துறை கெடுபிடிகளை அதிகரித்துள்ளது. அதேசமயம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித இடையூறுகளும் செய்வது இல்லை. மாலை 5:00 மணியுடன் ஹைவேவிஸ் ரோடு மூடப்படுவதால், அதற்குள் வந்துவிட அறிவுறுத்துகின்றனர். மேகமலை பகுதியில் சூழல் சுற்றுலாவிற்கு அனுமதிக்க வனத்துறை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.

ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராசா மெட்டு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த சூழல் சுற்றுலா இருக்க வேண்டும். உட்காருவதற்கான இருக்கைகள், பார்க், பயணம் செய்ய பேட்டரி கார்கள், மணலாறு அணையில் படகு சவாரி, சாப்பிடுவதற்கான ஓட்டல், தங்கும் விடுதி, 'டிரக்கிங்' என பல வசதிகள் செய்தால் சுற்றுலாப் பயணிகள் மூணாறுக்கு இணையாக வரத் துவங்குவர்.

தேக்கடி, பெரியாறு புலிகள் காப்பகத்தில் இருப்பது போன்று சூழல் சுற்றுலாவை செயல்படுத்த வேண்டும்.

அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு மேகமலையை சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது. இருந்தபோதும் புலிகள் காப்பகமாக மாறியுள்ளதால் வனத்துறையின் கட்டுப்பாட்டில் தான் சுற்றுலா நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பதால், தற்போது சூழல் சுற்றுலாவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இத்துறைக்கு நல்ல வருவாய் கிடைக்கும். வனப்பகுதிகளில் மேம்பாடு, வன உயிரினங்களின் பாதுகாப்பிற்கு இந்த நிதியை பயன்படுத்த முடியும்.

எனவே மேகமலை சூழல் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன் மூலம் நீண்டகால கோரிக்கைக்கு விடிவு ஏற்படுவதுடன், சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சொர்க்க பூமியாக மேகமலை திகழும்.






      Dinamalar
      Follow us