sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரூ.1.80 லட்சம் வழிப்பறி வழக்கு ஊழியர்கள் உட்பட மூவர் கைது

/

ரூ.1.80 லட்சம் வழிப்பறி வழக்கு ஊழியர்கள் உட்பட மூவர் கைது

ரூ.1.80 லட்சம் வழிப்பறி வழக்கு ஊழியர்கள் உட்பட மூவர் கைது

ரூ.1.80 லட்சம் வழிப்பறி வழக்கு ஊழியர்கள் உட்பட மூவர் கைது


ADDED : மே 25, 2024 10:48 PM

Google News

ADDED : மே 25, 2024 10:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி, தேனியில் மருந்து ஏஜன்சி ஊழியரிடம், 1.80 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த சக ஊழியர்கள் மற்றம் அவர்களது நண்பர் என மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தேனி மாவட்டம், பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சேவியர் ஆரோக்கியராஜ், 55. இவர், தேனியில் உள்ள மருந்து ஏஜன்சியில் பணிபுரிந்தார். இவர் மருந்துகடைகளில் பணம் வசூலித்து, அதனை வங்கியில் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் மே, 22ல் தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே வங்கியில் பணம் செலுத்த சென்ற போது டூ - வீலரில் வந்த இருவர் பணப்பையை பறித்து சென்றனர். சேவியர் ஆரோக்கியராஜ் தேனி போலீசில் புகார் அளித்தார்.

டி.எஸ்.பி., பார்த்திபன் உத்தரவில், இன்ஸ்பெக்டர் உதயகுமார், எஸ்.ஐ.,க்கள் மாயன், ஜீவனாந்தம் விசாரித்தனர்.

3 பேர் கைது


அதே மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 27, அல்லிநகரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார், 30, ஆகியோர் இணைந்து பணத்தை வழிப்பறி செய்ய திட்டமிட்டனர். இதற்கு சந்தோஷ்குமாரின் நண்பர் கார்த்திக் ராஜா, 24, என்பவரையும் ஈடுபடுத்தினர்.

சம்பவத்தன்று சந்தோஷ்குமார், கார்த்திக் ராஜா டூ - வீலரில் சென்று வழிப்பறியில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் இருந்த ரஞ்சித்குமார் அவர்களுக்கு மொபைல் போனில் அவ்வப்போது தகவல்களை கூறி வழி நடத்தியது தெரியவந்தது.

மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து, 1.64 லட்சம் ரூபாயை போலீசார் மீட்டனர். வழிப்பறிக்கு பயன்படுத்திய டூ - வீலர், மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us