ADDED : மே 12, 2024 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: புலிகுத்தி ஜோதிநகர் பிரபு 30, இவரது உறவின் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் அக்னிசட்டி எடுக்க இருந்தார். இதனால் பிரபு, இவரது மகன் பிரவேஷ் 3, பாட்டி சுப்புலட்சுமி ஆகியோர் ஒரே டூவீலரில் குமுளி -திண்டுக்கல் ரோடு வழியாக வீரபாண்டி சென்றனர்.
கோட்டூர் பெட்ரோல்பங்க் அருகே சென்ற போது டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பிரபு, சுப்புலட்சுமி, பிரவேஷ் காயமடைந்தனர். சின்னமனுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சுப்புலட்சுமி புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.