/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அறிவுரை கூறியவரை அரிவாளால் வெட்டியவருக்கு 4 ஆண்டுகள் சிறை
/
அறிவுரை கூறியவரை அரிவாளால் வெட்டியவருக்கு 4 ஆண்டுகள் சிறை
அறிவுரை கூறியவரை அரிவாளால் வெட்டியவருக்கு 4 ஆண்டுகள் சிறை
அறிவுரை கூறியவரை அரிவாளால் வெட்டியவருக்கு 4 ஆண்டுகள் சிறை
ADDED : ஆக 31, 2024 06:38 AM

தேனி : தேனியில் அறிவுரை கூறிய விவசாயி அம்மாவாசியை அரிவாளால் வெட்டிய மொக்கயைனுக்கு 67, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆண்டிப்பட்டி ராஜாதானி விவசாயி அம்மாவாசி 59. அதே பகுதியை சேர்ந்த மொக்கையன் தினமும் குடித்து விட்டு தெருவில் செல்வோருடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இதனை அம்மாவாசி கண்டித்து, அறிவுரை கூறினார்.
இதனால் மொக்கைசாமி ஆத்திரமடைந்து, அம்மாவாசிக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். இந்நிலையில் 2022 பிப்.,ல் வீட்டருகில் நின்றிருந்த அம்மாவாசியை மொக்கயைன் அரிவாளால் வெட்டினார்.
இச்சம்பவம் தொடர்பாக அம்மாவாசி மகன் பிரகாஷ் ராஜாதானி போலீசார் புகார் அளித்தார். வழக்கு விசாரனை தேனி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளி மொக்கையனுக்கு, நீதிபதி கவிதா, 4 ஆண்டுகள் சிறை, 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.