sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு 40ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

/

மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு 40ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு 40ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு 40ஆயிரம் பேர் எழுதுகின்றனர்


ADDED : மே 30, 2024 03:54 AM

Google News

ADDED : மே 30, 2024 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு 154 மையங்களில் நடக்கிறது. இதில் 40,869 பேர் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர்.

மாநில அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் குரூப் 4 பணிகளுக்கு ஜன., ல் தேர்வு அறிவிக்கப்பட்டது. குரூப் 4 பிரிவில் உள்ள வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட 6244 பணியிடங்களுக்கான தேர்விற்கு ஜன.,30 முதல் பிப்., 28 வரை விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. தேர்வு ஜூன் 9ல் நடக்கிறது.

தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் தாலுகா வாரியாக தேனி 46, ஆண்டிப்பட்டி 21, போடி 18, பெரியகுளம் 24, உத்தமபாளையம் 45 என மொத்தம் 154 மையங்களில் தேர்வு நடக்கிறது.

இத்தேர்வில் தாலுகா வாரியாக தேனி 12,433, ஆண்டிப்பட்டி 5098, போடி 5190, பெரியகுளம் 6610, உத்தமபாளையத்தில் 11538 பேர் என 40,869 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு மையங்களில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள், பாதுகாப்பு பணிகள் பற்றி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us