sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இடுக்கியில் 8 நாட்களில் 88 வழக்குகள் பதிவு; போதை பொருட்கள் தவிர்க்க விழிப்புணர்வு

/

இடுக்கியில் 8 நாட்களில் 88 வழக்குகள் பதிவு; போதை பொருட்கள் தவிர்க்க விழிப்புணர்வு

இடுக்கியில் 8 நாட்களில் 88 வழக்குகள் பதிவு; போதை பொருட்கள் தவிர்க்க விழிப்புணர்வு

இடுக்கியில் 8 நாட்களில் 88 வழக்குகள் பதிவு; போதை பொருட்கள் தவிர்க்க விழிப்புணர்வு


ADDED : மார் 03, 2025 07:11 AM

Google News

ADDED : மார் 03, 2025 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை, பயன்பாடு தொடர்பாக போலீசார் எட்டு நாட்களில் 88 வழக்குகள் பதிவு செய்து, போதைப் பொருட்கள் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கேரளாவில் போதை பொருட்கள் விற்பனை, பயன்பாடு தொடர்பாக டி.ஜி.பி. ஷேக்தர்வேஷ்சாஹேப் உத்தரவுபடி ஆப்பரேஷன் 'டி ஹண்ட்' என்ற பெயரில் பிப்.22 முதல் மார்ச் 1 வரை போலீசார் தீவிர பரிசோதனை நடத்தினர்.

அதில் இடுக்கி மாவட்டத்தில் எட்டு நாட்களில் 88 வழக்குகள் பதிவு செய்து 93 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் மூன்று பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கஞ்சா 2.03 கிலோ, மெத்தபெட்டமைன் 0.97 கிராம் உள்பட பல்வேறு போதை பொருட்கள் சிக்கின.

'போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். சோதனைகள் விரிவுபடுத்தப்பட்டு போதை பொருள் விற்பனை செய்வோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, இடுக்கி எஸ்.பி. விஷ்ணுபிரதீப் கூறினார்.

பொது மக்கள் போதை பொருட்கள் விற்பனை, பயன்பாடு தொடர்பாக கேரள போலீசின் 99959 66666 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் அளிக்கலாம்.






      Dinamalar
      Follow us