sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இறுதி ஊர்வலத்தில் பட்டாசு தகராறில் ஒருவர் கொலை நால்வர் மீது வழக்கு, ஒருவர் கைது

/

இறுதி ஊர்வலத்தில் பட்டாசு தகராறில் ஒருவர் கொலை நால்வர் மீது வழக்கு, ஒருவர் கைது

இறுதி ஊர்வலத்தில் பட்டாசு தகராறில் ஒருவர் கொலை நால்வர் மீது வழக்கு, ஒருவர் கைது

இறுதி ஊர்வலத்தில் பட்டாசு தகராறில் ஒருவர் கொலை நால்வர் மீது வழக்கு, ஒருவர் கைது


ADDED : மே 09, 2024 02:41 AM

Google News

ADDED : மே 09, 2024 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்,:தேனி பெரியகுளம் அருகே இறந்த முன்னாள் ராணுவ வீரரின் இறுதி ஊர்வலத்தில் வெடி வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் அருண்குமார் 21, வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அஜித்குமாரை 30 கைது செய்த போலீசார் கார்த்திக் 38, சரவணன் 27, செல்வம் 37 ஆகியோரை தேடி வருகின்றனர்.

பெரியகுளம் வைத்தியநாதபுரம் வெற்றிலை மடத்தெரு சூரியபிரகாஷ் 24. இவரது தாத்தா மனோகரன். முன்னாள் ராணுவ வீரர். இவர் நேற்று முன்தினம் இறந்தார். இறுதி ஊர்வலத்தில் சூரிய பிரகாஷ் வெடி வெடித்தார். ஊர்வலத்தில் பங்கேற்ற உறவினர் ராஜாமணி காலில் பட்டது. ராஜாமணியின் மகன் அஜித்குமார், அவரது நண்பர்கள் கார்த்திக், சரவணன், செல்வம் ஆகிய நால்வர் சூரியபிரகாஷை அவதுாறாக பேசினர். இருதரப்பினர் இடையே கைகலப்பும், பின் தகராறும் ஏற்பட்டது.

சூரியபிரகாஷின் தம்பி அருண்குமார் 21, தனது தாய் சித்ரா தேவியுடன் சென்று நான்கு பேரிடம், 'ஏன் எனது அண்ணனை தாக்கினீர்கள் என கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அஜித்குமார், சரவணன், செல்வம் ஆகியோர் அருண்குமார், சித்ரா தேவியை பிடித்துக் கொண்டனர். கார்த்திக் அரிவாளால் அருண்குமாரை வெட்டினார். ரத்த வெள்ளத்தில் தப்பி ஓடிய அருண்குமார் புதரில் விழுந்து இறந்தார். வடகரை இன்ஸ்பெக்டர் பாஸ்டின்தினகரன் தலைமையிலான போலீசார் அருண்குமாரின் உடலை மீட்டனர். நான்கு பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து, அஜித்குமாரை கைது செய்தனர். தலைமறைவான மூவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us