sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி இருவர் மீது வழக்கு

/

வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி இருவர் மீது வழக்கு

வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி இருவர் மீது வழக்கு

வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி இருவர் மீது வழக்கு


ADDED : ஆக 24, 2024 05:05 AM

Google News

ADDED : ஆக 24, 2024 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த சம்பவத்தில் இருவர் மீது மூணாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மூணாறு அருகே மாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சாபுதேவசியா. இவருக்கு திருப்பூணித்துறையைச் சேர்ந்த ரம்யா, பாலக்காட்டைச் சேர்ந்த ஜோசி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் சாபுதேவசியாவின் மகனுக்கு நியூசிலாந்த் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரம்யா, ஜோசி ஆகியோர் ரூ.8 லட்சம் கேட்டனர். அதன்படி முன் பணமாக கடந்தாண்டு மே மாதம் ரம்யாவின் வங்கி கணக்கு மூலம் ரூ.4 லட்சம் வழங்கினார்.

அதன்பிறகு கடந்த ஓராண்டாக இருவரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை.

அதனால் தான் ஏமாற்றப்பட்டதாக சாபுதேவகியா உணர்ந்தார். அவர் போலீசில் புகார் அளித்தார். மூணாறு போலீசார் ரம்யா, ஜோசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us