/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீஸ் ஸ்டேஷனில் அடாவடி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு
/
போலீஸ் ஸ்டேஷனில் அடாவடி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு
போலீஸ் ஸ்டேஷனில் அடாவடி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு
போலீஸ் ஸ்டேஷனில் அடாவடி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூன் 12, 2024 12:05 AM
ஆண்டிபட்டி : உசிலம்பட்டி குப்பணம்பட்டியை சேர்ந்த மணி என்பவரின் மகள் திவ்யா 24, தற்போது சிவகங்கை மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தொட்டப்பநாயக்கனூர் வாசி நகரைச்சேர்ந்த தனது தாய்மாமன் மகன் விஜயகுமார் என்பவரை காதலித்தார்.
திருமணத்திற்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு நாட்களுக்கு முன் ஆண்டிபட்டி அருகே வேலப்பர் கோயிலில் திருமணம் செய்து விட்டு ராஜதானி போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோர்களால் பிரச்னை வரும் என புகார் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இரு தரப்பினரையும் போலீஸ் ஸ்டேஷன் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
பணியில் இருந்த ஏட்டு கண்ணன், போலீசார் ராஜீவ், கலைச்செல்வி ஆகியோர் சண்டையிடுவதை தடுத்துள்ளனர். பெண் வீட்டார்கள் ஸ்டேஷனில் இருந்த பிளாஸ்டிக் சேர்களை எடுத்து மாப்பிள்ளை தரப்பினரை தாக்கினர்.
இதில் இரண்டு சேர்கள் உடைந்தது.
அங்கிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
விசாரித்த போலீசார் உசிலம்பட்டியை சேர்ந்த மணி, குப்பணம்பட்டியை சேர்ந்த கார்த்தி, தவமணி மற்றும் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துவிசாரிக்கின்றனர்.