ADDED : செப் 04, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி நகராட்சி காலனியை சேர்ந்தவர் முத்து 48. இவர் போடி பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவராக உள்ளார்.
இதே ஆட்டோ ஸ்டாண்டில் போடி குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவரும் ஆட்டோ டிரைவராக உள்ளார். முத்து ஸ்டான்டில் ஆட்டோவை நிறுத்த வரும் போது, இங்கு ஆட்டோவை நிறுத்த கூடாது என கூறி முத்துவை கண்ணன் தகாத வார்த்தையால் பேசி, அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். போடி டவுன் போலீசார் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.