ADDED : ஆக 29, 2024 08:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே கொப்பையம்பட்டியை சேர்ந்தவர் வேல்சாமி 70, இவரது மகன் செல்வகுமார் திருமணம் ஆகி விவாகரத்து பெற்று மனநலம் பாதித்து தந்தை பராமரிப்பில் இருந்துள்ளார்.
3 நாட்களுக்கு முன் வேல்சாமி சாமி கும்பிடுவதற்காக சுருளி சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது மகனை காணவில்லை. பக்கத்தில் எங்கேனும் சென்று இருப்பார் என்று நினைத்து தேடாமல் இருந்து விட்டார். தற்போது உறவினர்களிடம் விசாரித்தும் சரியான தகவல் கிடைக்கவில்லை. வேல்சாமி புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.