sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீசாரை தள்ளிவிட்டு டூவீலரை திருடி சென்றவரை பிடிக்க தனிப்படை

/

போலீசாரை தள்ளிவிட்டு டூவீலரை திருடி சென்றவரை பிடிக்க தனிப்படை

போலீசாரை தள்ளிவிட்டு டூவீலரை திருடி சென்றவரை பிடிக்க தனிப்படை

போலீசாரை தள்ளிவிட்டு டூவீலரை திருடி சென்றவரை பிடிக்க தனிப்படை


ADDED : ஜூலை 05, 2024 05:23 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: போலீஸ் சோதனை சாவடியில் டூவீலரில் நிற்காமல் சென்றவரை பிடித்த போலீஸ்காரரை கீழே தள்ளிவிட்டு டூவீலரை பறித்து சென்றவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தேவதானப்பட்டி அருகே டி. காமக்காப்பட்டியில் சோதனை சாவடியில் தேனி, திண்டுக்கல் மாவட்ட போலீசார்

இணைந்து சோதனை நடத்துகின்றனர். ஜூலை 2 அதிகாலையில் ஏட்டுகள் நரேந்திர சிங் 41, செல்வராஜா, போலீஸ்காரர் கார்த்திக் ஆகியோர் டூவீலர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது (டி.என்.50 பி.ஒய் 1892) பதிவு எண் கொண்ட டூவீலரில் வந்தவர் சோதனை சாவடியில் நிற்காமல் கொடைக்கானல் ரோட்டில் வேகமாக சென்றார். அவரை பிடிக்க ஏட்டு நரேந்திர சிங் சோதனைக்காக நிறுத்தியிருந்த மதுரை காளிதாஸ்சின் டூவீலரையை (டி.ஏ.எல்.1760) எடுத்து சென்று மர்ம நபரை விரட்டி பிடித்தார். அவர் போலீஸ்காரர் நரேந்திர சிங்கை கீழே தள்ளி அவர் ஓட்டி வந்த டூவீலரிரை பறித்து மர்மநபர் தப்பினார்.மர்மநபர் முதலில் ஓட்டி சென்ற டூவீலர் திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் திருடுபோனதாக புகார் உள்ளது.

மர்ம நபரிடம் போலீசார் பறிகொடுத்த டூவீலர் மதுரை சுற்றுலா பயணி காளிதாஸ் தனது டூவீலரை மீட்டு தர கோரியுள்ளார். ஒரு வாரத்தில் டூவீலர் ஒப்படைப்பதாக போலீசார் சமாதனாப்படுத்தினர். டூவீலரில் தப்பி சென்ற நபரை பிடிக்க எஸ்.ஐ., வேல் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருகிறனர்.






      Dinamalar
      Follow us