sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

புலியிடம் சிக்கி காட்டு மாடு பலி

/

புலியிடம் சிக்கி காட்டு மாடு பலி

புலியிடம் சிக்கி காட்டு மாடு பலி

புலியிடம் சிக்கி காட்டு மாடு பலி


ADDED : ஜூலை 21, 2024 08:10 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 08:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி., கம்பெனிக்குச் சொந்தமான பெரிய வாரை எஸ்டேட், லோயர் டிவிஷனில் புலியிடம் சிக்கி காட்டு மாடு இறந்தது.

மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் புலி, சிறுத்தை ஆகியவற்றிடம் சிக்கி தொழிலாளர்கள் உப வருமானத்திற்கு வளர்க்கும் பசுக்கள் ஏராளம் பலியாகி வருகின்றன. இதனிடையே புலியிடம் சிக்கி காட்டு மாடு இறந்தது.

பெரியவாரை எஸ்டேட் லோயர் டிவிஷனில் தொழிலாளர்கள் குடியிருப்பு அருகே காட்டில் உடல் பாதி தின்ற நிலையில் ஆறு வயதுடைய காட்டு மாடு இறந்து கிடந்தது. அதனை புலி தாக்கி கொன்றதாக தெரிய வந்தது. மூணாறு வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி காட்டு மாட்டை கொன்றது புலி என்பதை உறுதி செய்தனர்.

புலி குடியிருப்பு பகுதியில் நுழைவதை கண்காணிப்பதற்கு வனத்துறை வாச்சர்கள் நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் ' ட்ரோன்' கள் மூலம் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us