sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரேஷன் மண்ணெண்ணெய்யில் கலப்படம்; ஊழியர்களிடம் போலீசார் விசாரணை

/

ரேஷன் மண்ணெண்ணெய்யில் கலப்படம்; ஊழியர்களிடம் போலீசார் விசாரணை

ரேஷன் மண்ணெண்ணெய்யில் கலப்படம்; ஊழியர்களிடம் போலீசார் விசாரணை

ரேஷன் மண்ணெண்ணெய்யில் கலப்படம்; ஊழியர்களிடம் போலீசார் விசாரணை


ADDED : ஜூன் 17, 2024 12:08 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மூணாறில் ரேஷன் கடைகளுக்கு வினியோகிக்கப்பட்ட மண்ணெண்ணெய்யில் தண்ணீர் கலந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

கேரளாவில் ரேஷன் கடைகளுக்கு தேவையான பொருட்கள் அரசு சார்பிலான 'சப்ளை கோ' நிறுவனம் மூலம் வினியோகிக்கப்படுகிறது. அதன்படி மூணாறு ஊராட்சி அலுவலகம் ரோட்டில் உள்ள 'சப்ளை கோ' நிறுவனத்திற்கு சொந்தமான மண்ணெண்ணெய் டிப்போவில் இருந்து ரேஷன் கடைகளுக்கு தண்ணீர் கலந்த மண்ணெண்ணெய் வினியோகிக்கப் பட்டதாக புகார் எழுந்தது. அதுகுறித்து சப்ளை கோ விஜிலன்ஸ் பிரிவினர் விசாரணை நடத்தினார். அதில் மூணாறைச் சேர்ந்த இளநிலை ஊழியர் ராஜூ டிப்போவில் பொறுப்பு வகித்த போது 562 லிட்டர் தண்ணீர் கலக்கப்பட்டதாக தெரியவந்தது. அவரை சப்ளை கோ கூடுதல் பொது மேலாளர் சூராஜ் மே இறுதியில் பணியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்தார்.

அச்சம்பவம் குறித்து விசாரிக்குமாறு சப்ளை கோ கோட்டயம் மண்டல மேலாளர் ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்தார். அதன்படி மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் எஸ்.ஐ. அஜேஷ் கே. ஜான் டிப்போவில் பிற ஊழியர்களிடம் விசாரித்தார். அதேபோல் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியரிடமும் விசாரணை நடந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us