/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெல் வயலில் எலித்தொல்லை கட்டுப்படுத்த ஆலோசனை
/
நெல் வயலில் எலித்தொல்லை கட்டுப்படுத்த ஆலோசனை
ADDED : ஆக 21, 2024 06:22 AM

கம்பம் : நெல் வயலில் எலித் தொல்லையை கட்டுப்படுத்துவது குறித்து கம்பம் வேளாண் உதவி இயக்குநர் பூங்கோதை ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் எலிகளால் நெல் சாகுபடியில் 5 முதல் 10 சதவீதம் பாதிப்பு ஏற்படுகிறது.
எலிகளை நெல் வயல்களில் கட்டுப்படுத்த குறுகலான வரப்பு அமைக்க வேண்டும், ஆட்டுக் கிடை அமைத்தால் எலி வராது. நொச்சி மற்றும் எருக்கலை செடியை வேலி பயிராக வளர்க்கலாம். சணப்பு பூவை சிறியதாக வெட்டி வயலில் ஆங்காங்கே போட்டாலும் எலித் தொல்லை இருக்காது.
பசுஞ் சாணத்தை வயலிலும் வரப்பிலும் வைக்கலாம். பருவமில்லா காலங்களில் பொந்துகளை தோண்டி எலிகளை கொள்ளலாம்.
நடவு செய்த 3, 4 வாரங்களுக்கு பின் ஜிங்க் பாஸ்பேட் அல்லது புரோ மோடையோ லோன் வைத்து கட்டுப்படுத்தலாம்.
தஞ்சாவூர் அல்லது மூங்கில் பொறிகள் எக்டேருக்கு 100 வைத்து தொடர்ச்சியாக எலிகளை பிடிக்கலாம். ஆந்தை மற்றும் பிற பறவைகள் அமர்வதற்கான T வடிவ குச்சிகளை 40 முதல் 50 வரை வைக்கலாம்.
அந்த ஓலைகளில் பனை இலைகளை கட்டி வைக்கலாம். பப்பாளி காய்களை நறுக்கி வயல்கள் வரப்புகளில் ஆங்காங்கே வைக்கலாம்.
ஜிங்க் பாஸ்பேட்டுடன் பொறிக்கப்பட்ட சோளம், கருவாடு, அரிசி போன்றவற்றை 1:49 என்ற விகிதத்தில் கலந்தும், எலிப் பொத்துகளில் 0.5 கிராம் அலுமினிய பாஸ்பேட்டை ஒரு பொத்துக்கு 2 மாத்திரைகள் வீதம் வைத்தும் கட்டுப்படுத்தலாம் இவ்வாறு கூறியுள்ளார்.

