/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கஞ்சா தோட்டத்தை அழித்துவிட்டு திரும்பிய போலீசாரை துரத்திய யானை
/
கஞ்சா தோட்டத்தை அழித்துவிட்டு திரும்பிய போலீசாரை துரத்திய யானை
கஞ்சா தோட்டத்தை அழித்துவிட்டு திரும்பிய போலீசாரை துரத்திய யானை
கஞ்சா தோட்டத்தை அழித்துவிட்டு திரும்பிய போலீசாரை துரத்திய யானை
ADDED : ஆக 30, 2024 06:55 AM

சின்னமனுார்: தேனி மாவட்டம், மேகமலையில் ஏலத்தோட்டத்திற்குள் கஞ்சா சாகுபடி செய்திருந்ததை அறிந்த வனத்துறையினர், சின்னமனுார் காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். போலீசார் நேற்று முன்தினம், ஹைவேவிஸ் அணையிலிருந்து, 7 கி.மீ., தொலைவில் இருந்த குழிக்காடு என்ற இடத்தில், தோட்டம்போல் பயிரிடப்பட்டு நன்கு வளர்ந்திருந்த, 60 செடிகளை வெட்டி, தீ வைத்து அழித்தனர்.
திரும்பி வரும் போது, யானை ஒன்று போலீஸ் குழுவை துரத்தியது. போலீசார் சமயோஜிதமாக செயல்பட்டு, வனப்பகுதியில் இருந்து ஹைவேவிஸ் அணைப்பகுதிக்குள் சென்று தப்பினர். அணையை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளதால், யானை திரும்பி சென்றது. இதனிடையே, கஞ்சா பயிரிட்டது தொடர்பாக, சின்னமனுார் அருகே உள்ள கரிச்சிபட்டியை சேர்ந்த முருகன், 51, கருப்பசாமி 47, மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த மணி, 42, கேரளா நெடுங்கண்டத்தை சேர்ந்த மேத்யூ ஜோசப், 58, ஆகிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.

