ADDED : ஆக 26, 2024 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்:
கூடலுார் ஒக்கலிகர் மகாஜன சங்கம் சார்பில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
சங்கத் தலைவர் ராம்பா, பொருளாளர் சரவணன் முன்னிலையில், செயலாளர் அருண்குமார் ஊக்கத்தொகை, நினைவு பரிசு வழங்கினார்.
என்.எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர்கள் கதிரேசன், ராமராஜ், தலைமை ஆசிரியர் வெங்கட்குமார், பெற்றோர்கள், மாணவர்கள், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

