/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கால்நடை உதவியாளர் பணியிடம் நியமனம் செய்ய எதிர்பார்ப்பு
/
கால்நடை உதவியாளர் பணியிடம் நியமனம் செய்ய எதிர்பார்ப்பு
கால்நடை உதவியாளர் பணியிடம் நியமனம் செய்ய எதிர்பார்ப்பு
கால்நடை உதவியாளர் பணியிடம் நியமனம் செய்ய எதிர்பார்ப்பு
ADDED : செப் 01, 2025 02:34 AM
கம்பம்: கால்நடை பராமரிப்புத் துறையில் உதவியாளர் பணியிடங்களை அந்தந்த மாவட்ட இணை இயக்குநர்கள் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பங்களை பெற்று நேர்காணல் நடத்தி நியமனம் செய்து கொள்ள அரசு அனுமதி வழங்கியது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே நேர்காணல்நடந்தது.
கோர்ட் இடைக்காலத் தடை உத்தரவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கோர்ட்டில் இருந்த தடை விலக்கி கொள்ளப்பட்டது. பிற மாவட்டங்களில் நியமனங்கள் நடக்கிறது. ஆனால் தேனி மாவட்டத்தில் இதுவரை நியமனம் நடக்கவில்லை.
கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறியதாவது: மாவட்டத்தில் 37 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்ப நிரப்ப 2 ஆண்டுகளுக்கு முன், 4 நாட்கள் நேர்காணல் நடத்த முடிவு செய்து, 2 நாட்கள் நடந்தது. இன்னமும் 2 நாட்கள் நடக்க உள்ளது. விரைவில் நேர்காணலை முடித்து, பணியிடங்கள் நிரப்பப்படும்., என்றனர்.