sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு

/

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு


ADDED : செப் 07, 2024 07:01 AM

Google News

ADDED : செப் 07, 2024 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராமநாதன். நாடார் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பூரணசெல்வி. இருவரும் ஆசிரியர் தினத்தில் சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர்கள் உதயநிதி, மகேஷிடம் நல்லாசியர் விருது பெற்றனர்.

கல்வித்துறையில் கற்பித்தல் பணிகளை அர்ப்பணிப்புடன் செய்து, உறவின்முறைக்கு பெருமை சேர்த்த இவர்களின் பாராட்டு விழா நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உறவின்முறை நிர்வாகிகள் இணைந்து, இரு ஆசிரியர்களையும் கவுரவித்தனர். ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், அனைத்து கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள் பங்கேற்றனர். விழாவை ஆண்கள் பள்ளிச் செயலாளர் முருகன், மெட்ரிக் பள்ளிச் செயலாளர் நவமணி, இணைச் செயலாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

கம்பம்: ஸ்ரீ முக்தி விநாயகர் நடு நிலைப்பள்ளி ஆசிரியை சாந்தி தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியை விருது பெற்றதற்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

கம்பம் ஸ்ரீமுக்தி விநாயகர் நடுநிலைப்பள்ளியில் 36 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வரும் சாந்திக்கு மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவ் விருதினை செப்.5ல் சென்னையில் நடந்த விழாவில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் வழங்கி கவுரவித்தார்.

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை சாந்திக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி நிர்வாக குழு தலைவர் காந்தவாசன், நல்லாசிரியை விருது பெற்ற சாந்திக்கு சால்வை அணிவித்து வாழ்த்தி பேசினார்.

அவர் கூறுகையில்,இதுவரை இப் பள்ளியை சேர்ந்த 5 பேர் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளனர் என்றார். நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் கணேசன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us